சமீப காலமாக இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வு
பொதுமக்களிடம் சற்று அதிகமாக காணப்படுகிறது. ஒரு பக்கம் தொற்று நோய்கள், சுகாதாரமின்மை,
உணவுப் பொருட்களில் கலப்படம், என்று எங்கும் எதிலும் கலப்படம். இயற்கை உணவுகளை ஒதுக்கி விட்டு,
செயற்கையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, நம்மில் பலருக்கு சிறுதானிய உணவுகள் மற்றும்
அதன் சத்துக்கள் பற்றி அறவே தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை. சென்னை மாநகராட்சி அலுவலக ரிப்பன் பில்டிங்
வளாகத்தில் செயல்பட்டு வரும் மூலிகை உணவகத்தில், சிறுதானிய உணவு வகைகளும், மூலிகை சூப்
வகைகளும் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
சிறுதானியங்களைக் கொண்டும் அனைத்து விதமான
உணவு வகைகளையும் (இட்லி முதல் பீட்சா வரை) எளிதாகவும், சுவையாகவும்,
சத்தாகவும் சமைக்க முடியும். சென்னை மாநகராட்சி
நகரில் பல்வேறு இடங்களிலும் இந்த மூலிகை உணவகங்களை திறந்தால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை
பெறும்.
Thanks: Dinamalar.
Thanks: Dinamalar.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக